Thursday, June 14, 2007

2.மறைவாக நமக்குள்ளே!!

மூடநம்பிக்கைகள் குறித்து - எனது வானொலி ஒலிபரப்புக் கவிதையிலிருந்து


மறைவாக நமக்குள்ளே பேசிவரும் பழங்கதைகள்!
புரையோடி இருக்கின்ற சமுதாயப்பேதமைகள்!
அணியாக நமக்கெல்லாம் ஆறறிவு இருந்தாலும்,
பிணியாக அறியாமை பின்தொடரும் நிலைதானே!
அறிவான செய்தியெல்லாம் ஆயிரங்கள் நிறைந்திருக்க!
அறிவற்ற பழங்கதையின் ஆதிக்கம் அழிப்பதற்கு!
தெளிவான அறிவாலே காரணத்தை சிந்தித்தால்!
இனியெனும் நமக்கெல்லாம் இனிதான முடிவாகும்.-1

விண்ணுலகில் சுற்றுகின்ற நிலவின் மேலே!
விடியாமல் ஒருபக்கம் இருட்டாய் உண்டு!
மறுபக்கம் நிறைவான ஒளியைப் பெற்று
மறைந்திருக்கும் இருட்டுக்கு விளக்கம் சொல்லும்!
அதைப்போல அறிவான உலகத்தின் மேல்
அறியாமை இருட்டேதான் நிறைய உண்டு.!
அறிவோடு நாமெல்லாம் சிந்தித் தெங்கும்
அகற்றிடுவோம் அறியாமை பேய்கள் தன்னை.-2.

விரைவாக வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின்
விளைவாக புதுமைகளை படைக்கக்கண்டும்.
சோதிடமாம் சாதகமாம் கேட்ப்போர்க் கெல்லாம்
சாதகமாய் பொய் சொல்லி ஏய்ப்போர் பேச்சை
பேதமையால் அதை நம்பி காரியத்தை
பெரிதாக தொடங்குகின்ற அறியாமையால்,
காற்றடிக்கும் திசைநோக்கி பறக்குமிந்த
காற்றாடி போல் மன்தன் போலியாவான்.-3

மண்ணுலகில் இருக்கின்ற மதியீனங்கள்
மறைவதற்கு அறிவோடு சிந்திப்போமே!

4. விண்ணுலகில் இருக்கின்ற கிரகமெல்லாம்
விதியாக நம்வாழ்வை தடுக்கும் என்போர்
கண்ணெதிரே உலகத்தை மறந்து விட்டு
காணாத கற்பனையில் பறகின்றார்கள்
மின்னுகின்ற வின்மீன்கள் இவர்கள் வாழ்வில்
விளைவித்த பாதிப்பை எங்கே கண்டார்.
வீணான விளக்கங்கள் வேண்டாங்கே
விரிவான அறிவான விளக்கம் தேவை.- 4.

உயிருள்ள விலங்கினங்கள் இறந்தபின்னால்
உதிர்ந்துவிட்ட எலும்பெல்லாம் வெயிலில்பட்டால்
வெளியாகும் பாஸ்பரசு அய்ந்தாக்சைடு
உருவான ஆக்சைடும் வெப்பக் காற்றால்
எளிதாக தீப்பிடித்து எரிதல் கண்டு
கொள்ளிப்பேய் எனச்சொல்லும் விளக்கமெல்லாம்
கொழுந்துவிட்ட மடமைக்கு விளக்கமாகும்.
தெளிவோடு அறிவோடு சிந்திப்போமே!- 5.

தாவரங்கள் பச்சையத்தை சேர்க்கும்போது
வெளியாகும் வாய்விங்கே உயிர்வாய்வாகும்.
தாவரங்கள் இரவினிலே சுவாசித்திட்டால்
வெளியாகும் கார்பனுடன் இரண்டாக்சைடை
சுவாசித்தால் நமக்கெல்லாம் திணரும்மூச்சு
இரவினிலே உறங்குகின்ற மனிதரெல்லாம்
இக்காற்றை சுவாசித்த விளைவைக் கண்டு
அமுக்குப்பேய் எனச்சொல்லும் விளக்கமெல்லாம்
அறிவிலிகள் சொல்லுகின்ற கதைகள் தானே!

6ஆ. தாவரங்கள் கதிரவனின் ஒளியைப்பெற்று
ஸ்டார்ச் என்ற பச்சையத்தை இலையில் சேர்க்க
வெளியாகும் வாய்விங்கே உயிர்வாய்வாகும்
இரவினிலே தாவரங்கள் சுவாசித்திட்டால்
வெளியாகும் கார்பனுடன் இரண்டாக்சைடை
சுவாசித்தால் நமக்கெல்லாம் திணரும்மூச்சு
இரவினிலே உறங்குகின்ற மனிதரெல்லாம்
இக்காற்றை சுவாசித்த விளைவைக் கண்டு
அமுக்குப்பேய் எனச்சொல்லும் விளக்கமெல்லாம்
அறிவிலிகள் சொல்லுகின்ற கதைகள் தானே!

7. சகுனங்கள் பார்ப்பதையே சடங்காகக் கொண்டவர்கள்!
மடமைக்கு சான்றாக மற்றவர்க்கு இருப்பவர்கள்!
புறப்பட்டு செல்கையிலே பூனையது குறுக்கிட்டால்!
அபாயம் வருவதற்கு அதுவேதான் அறிகுறியாம்!
விதவை ஒருத்தியவள் வீதியிலே நடந்துவந்தால்!
கண்ணில் எதிர்பட்டால் காரியங்கள் நடக்காதாம்!
கண்ணிப்பெண்ணொருத்தி கண்ணெதிரில் நடந்துவந்தால்!
கடிதான காரியங்கள் எளிதாக நடந்திடுமாம்.

9. இருவேறு பெண்ணினங்கள் எதிராக வருவதற்கு!
எதிரான இருவிளக்கம் தருவோரிங்கே!
முன்னுக்கு முரண்பட்ட கொள்கைக்கிங்கே!
முடிவான அறிவான விளக்கமில்லை!
மண்ணின்மேல் மனிதயினம்.....

10. நல்லவர்கள் தம் அறிவால் சிந்திதிட்ட
நல்லறிவைக் கேட்காமல் சுவரின் ஓரம்
பல்லிசொல்லும் பலன்கேட்டு முடிவைச்செய்யும்
பரிதாப அறிவு பெற்ற மனிதரெல்லாம்
வில்லாக வளைந்திருக்கும்வானத் தின்கீழ்
வீணான வாழ்வினைத்தான் நடத்துகின்றார்
செல்லரித்த கொள்கையெல்லாம் உண்மைவாழ்வில்
செல்லாத காசாக ஆகிப்போகும்.

11.உலகத்தில் வாழ்கின்ற உயிர்கட்க்கெல்லாம்
உயிர்விட்டு பிரிந்தபின் உண்டாம் வாழ்க்கை!
சொர்க்கமென நரகமென விளக்கும் பேச்சு
வீணான கற்பனையும் கதையும் ஆகும்!
புரியாத ஒன்றினையே புரிந்ததாக
புதுவிளக்கம் கொடுத்துவிட்டு ஏய்ப்போரிங்கே
இல்லாத ஒன்றினையும் இருக்குமென்றால்
இடித்துரைத்து திருத்துவதும் கடமையன்றோ!

பூங்குன்றாய் அறிவெல்லாம் புகழ்மணக்க
புகழ்பரப்பும் சிந்தனைகள் நிறைந்திருக்க
பிற்போக்கில் முற்போக்காய் இருக்குமிந்த
பின்னடைந்த சமுதாயம் குழப்பக்குட்டை
எண்ணத்தில் மறைந்திருக்கும் பொய்மையெல்லாம்
எடுத்தெரிந்து விட்டால்தான் எதிர்காலத்தில்
மண்ணின்மேல் வாழுகின்ற மனிதரெல்லாம்
மகத்தான சாதனைகள் புரிவாரிங்கே!

No comments: